ஜனநாயகத்தை நம்புகிறேன்: சசிகலா உறுதி

ஜனநாயகத்தை நம்புகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஜனநாயகத்தை நம்புகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
    2வது நாளாக காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களைச் சந்திப்பதற்கு முன்பாக, போயஸ் தோட்ட இல்லத்துக்கு வெளியே காரில் இருந்தபடியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அப்போது, எங்களுக்கு இப்போது நடைபெற்று வரும் சலசலப்பு புதிது அல்ல.பத்திரிக்கையாளர்களுக்கு விஷயம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். நான் கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் வந்திருக்கிறது. உயிரை விட்டு விடுவேன் என்று ஆளுநருக்கு எழுதியதாக வந்துள்ளது. இதை எனது நண்பர் எனக்கு அனுப்பி, சமூக வலைதலங்களில் வந்திருக்கிறது பாருங்கள் என்றார். நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்று தன் கையில் வைத்திருந்த கடித நகல் ஒன்றை காண்பித்து பேசினார்.
என்னைப் பொறுத்தவரை, நான் பொதுச் செயலாளராக இந்தக் கட்சிக்கு, அதிமுகவுக்கு வந்திருக்கிறேன். இந்தச் சோதனைகள் எங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. இதிலிருந்து மீண்டும் வெற்றி பெறுவேன் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலைமையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தை நம்புகிறேன். எங்களிடம் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் என்னோடு அன்போடு பழகுகிறார்கள். இன்றும் அவர்களைச் சந்திக்கிறேன். அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கத்தான் போகிறோம்.
நிச்சயமாக அதிமுக கட்சிதான் தமிழகத்தில் இருக்கும். நான்கரை ஆண்டு காலத்தையும் அதிமுக ஆட்சியாகத்தான் மக்களுக்காகச் செயல்படும். நான் ஒரு பொதுச் செயலாளராக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com