மக்கள் சேவைக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் அவர் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ அலுவலகத்தில்தான் இருக்கிறேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். தொகுதியில் இல்லை என சிலர் தவறாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் நான் நியாயமாக செயல்பட விரும்புகிறேன். மக்களுக்காக சேவையாற்றுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை.
மேலும், மக்களுக்கு சேவை ஆற்றவே, ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியை பரிசாக அளித்துள்ளார். மக்கள் சேவைக்கே முக்கியத்துவம் தருவேன் என பதிவிட்டுள்ளார்.