ஆளுநர் வித்யா சாகர் ராவ் 76-வது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா கடிதம் அளித்துள்ளார். இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், வித்யா சாகர் ராவின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாகும். இதையடுத்து, அவருக்கு பூச்செண்டை சசிகலா அனுப்பி வாழ்த்தினார். இதுபோல் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதில், "நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.