எண்ணூர் அருகே மீனவ கிராமத்தில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே ‌மீனவ கிராமத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50க்‌கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே ‌மீனவ கிராமத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50க்‌கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின.

காசிவிஸ்வநாதன் கோயில் குடியிருப்பில் நள்ளிரவு இந்த தீ விபத்து நேரிட்டது. இதனால் உறக்கத்திலிருந்தவர்கள், அவசர அவரமாக வெளியேறினர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவெனப் பரவியது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மணலி, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்புக்கான காரணங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com