எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல்: வி.கே.சசிகலா

அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன என கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல்: வி.கே.சசிகலா

அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன என கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாரையும் நாங்கள் அடைத்து வைக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக இருப்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கண்கூடாகப் பார்க்கலாம்.
எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்களும் எதிர் அணியைச் சேர்ந்தவர்களும் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக உள்ளனர்.
ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்யக் காரணம் என்ன என்று கேட்கிறீர்கள். நீங்கள் நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேன். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்பதை நீங்களே இங்கு பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
நான் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு கூறப்பட இருப்பதாகக் கூறுகிறீர்கள். தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம். அதற்கு முன்பாகவே ஏன் ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டும் என்றார் வி.கே.சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com