தமிழக ஆளுநர் விரைவில் தனது முடிவை அறிவிப்பார்: முன்னாள் ஆளுநர் ரோசய்யா

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் விரைவில் தனது முடிவை அறிவிப்பார்: முன்னாள் ஆளுநர் ரோசய்யா

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா கூறியுள்ளார்.
தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரோசய்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆட்சி அமைப்பதற்கான போட்டியில் சசிகலாவும், பன்னீர்செல்வமும் இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்பதை அறிந்து கொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன்.
யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற கேள்விக்கு தற்போதைய ஆளுநர் திங்கள்கிழமைக்குள் பதில் அளிப்பார். அதே நேரம் அவர் சட்டத்துக்குள்பட்டே நிதானமாக செயல்பட்டு வருவதாகவும் ரோசய்யா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com