சென்னை: ராஜினாமா கடிதம் கொடுத்து ஒரு வார காலத்துக்குப் பிறகு, சசிகலாவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்து நிற்கும் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் வந்தார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்திருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனது இல்லத்தில் இருந்து தொண்டர்களின் அணிவகுப்போடு பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் வந்தார். முன்னதாக, நான் தலைமைச் செயலகம் சென்று வழக்கமான பணியில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னதாக தலைமைச் செயலகம் வந்திருந்தார். முதல்வர் வரவிருந்த நிலையில், ஸ்டாலினின் வருகை பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இது தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முதல்வர் வருகைக்கு முன்பே ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.