வெள்ளக்கோயில்: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த ராமசாமி இதனைத் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டபேரவை தொகுதி வெள்ளகோயிலைச் சேர்ந்த அஇஅதிமுக முன்னாள் ஊரக தொழில் துறை அமைச்சர் துரை. ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிமுக கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.