கூவத்தூர்: கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக பொதுச் செயலர் சசிகலா, அங்கிருக்கும் அதிமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துவிட்டது.
எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், சசிகலா அடுதது 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சொகுசு விடுதிக்குள் காவல்துறையினர் விரைந்ததாகவும் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.