சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 80 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 80 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 80 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (80). இவர் அப்பகுதியில் வாடகை சைக்கிள் கடை மற்றும் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 10 வயது மகள் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் துரைசாமியின் பெட்டிக் கடைக்கு சென்று சாக்லேட் வாங்குவாராம். நாளடைவில் சிறுமியிடம் காசு வாங்காமல் சாக்லெட் கொடுத்த துரைசாமி, அவரை நாள்தோறும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி பல நாட்கள் பள்ளிக்கு செல்லாமல், துரைசாமியின் வீட்டுக்கே சென்றுள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியை மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, துரைசாமி தினமும் சாக்லேட் கொடுத்து, சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோர் சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் துரைசாமியை 2016-ஆம் ஆண்டு பிப். 21-ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெஸிந்தா மார்ட்டீன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துரைசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com