சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10 கோடி தண்டமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது. மேலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே இனிப்புகள் வழங்கி, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் இல்லம் உள்ள கிரீன்வேஸ் சாலைலும் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.