புது தில்லி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையுமாறும், இறந்துவிட்டதால் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்த தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பினர் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.