சென்னை: தங்களின் செயலுக்கு வருந்தம் தெரிவித்து நேரிலும் கடிதத்திலும் மன்னிப்பு கோரியதால் அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டதால் டி.டி.வி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில் டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கட்சியில் நடக்கும் சம்பவங்களை சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தெரிவிப்பார்கள் எனவும் சசிகலாவின் கட்டளையின்படி இவர்கள் இருவரும் கட்சியை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.