சென்னை: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுத்திக்கு செல்லாமல் இருந்து வந்தார் நட்ராஜ். இதையடுத்து நட்ராஜ் தனது ஆதரவை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கா அல்லது சசிகலா தரப்புக்கா என மர்மமாக இருந்து வந்தது.
இந்நிலையில், சசிகலா அதரவாளாரான எடப்பாடி பழனிச்சாமிக்கு, நட்ராஜ் தனது ஆதரவை அளிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அதிமுக பேரவை உறுப்பினர் நட்ராஜி, கட்சி உடையக்கூடாது என்பதே எனது விருப்பம். எனவே, பெரும்பான்மை எங்கே இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.