கொடைக்கானலில் ஐஎஸ் பயங்கரவாத அச்சுறுத்தல்: தீவிர சோதனையில் போலீஸார்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்த இருப்பதாக பரவிய தகவலை அடுத்து அப்பகுதியில்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்த இருப்பதாக பரவிய தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கானல் என்ற பகுதியில் உள்ள விடுதிகளில் வெளிநாட்டவர்கள் அதிகம் தங்குவதால், அதில் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை தாக்கும் நோக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கொடைக்கானலில் முகாமிட்டு உளவு பார்த்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

இதையடுத்து அங்கு காவல்துறை சிறப்பு படையினர் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும் அவர்களின் தொடர்பு தேவைக்காக, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, கண்காணிப்பு ஓளிப்பதிவு சாதனங்கள் மற்றும் குரல் தொடர்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை தலைவர் கார்த்திகேயன் துவக்கி வைத்து மலைப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com