சென்னை எழும்பூர் -தூத்துக்குடி சிறப்புக் கட்டண ரயில்

சென்னை எழும்பூர் -தூத்துக்குடி இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் -தூத்துக்குடி இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ரயில் எண் 06029: பிப்ரவரி 25 -ஆம் தேதி, சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com