சென்னை: தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை முன் வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கருவேல மரங்கள் ஓழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று தனது மௌனத்தைக் கலைத்தார்.
தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து தான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியுள்ளார்.