திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வருமாறு திமுக கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வருமாறு திமுக கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் ஆளும் அதிமுக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒர் அணியாகவும், சசிகலா தலைமையில் ஓர் அணி எனக இரண்டாக பிளவுற்றுள்ளது.

இந்நிலாயில், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.

தற்போது ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற குழப்பான சூழல் நிலவும் நேரத்தில் திமுக கொறடா சக்கரபாணி அனைத்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் சென்னை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது சட்டப்பேரவையில் 89 திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஆளுநர் வழங்கவுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்களின் அழைப்பு முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக என்ற ஒரு கட்சி இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com