நடிகர் தனுஷ் மீது உரிமை கோரும் தம்பதி நகல் ஆவணங்கள் தாக்கல்: உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று மேலூர் தம்பதி உரிமை கோரும் விவகாரத்தில் இரு தரப்பினரும் தாக்கல் செய்த நகல் ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை ஏற்க
நடிகர் தனுஷ் மீது உரிமை கோரும் தம்பதி நகல் ஆவணங்கள் தாக்கல்: உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று மேலூர் தம்பதி உரிமை கோரும் விவகாரத்தில் இரு தரப்பினரும் தாக்கல் செய்த நகல் ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் அசல் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தனுஷ் தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு மேலூர் தம்பதியர்
தாக்கல் செய்த பதில் மனுவில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரும், தனுஷ் பயின்றதாக கூறப்படும் பள்ளிகளின் வருகைப் பதிவேடு, மாற்றுச் சான்றிதழ்களின் நகல்களைச் சமர்பித்தனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, அசல் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com