பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வி.கே. சசிகலா, இளவரசி ஆகியோர் 5 மணியளவில் சரணடைந்தனர்.
பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் சரணடைந்துள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு சிறையில் அடைக்கப்படுவர்.
பெங்களூரு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா சரணடைந்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான அதிமுகவினர். குவிந்துள்ளனர்.