தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் 20ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பை ஏற்று அதிமுகவின் சட்டப்பேரவை குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகைக்கு சென்று சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியை, தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக ஆளுநர் அழைத்துள்ளார். மேலும் 15 நாட்களில் சட்டப்பேரவையில் பெருமான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வரும் 20ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.