தமிழகத்தின் புதிய முதல்வர் குறித்த முடிவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை (பிப்.16) அறிவிப்பார் என்று தெரிகிறது.
முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணியினரும் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் தனித் தனியே ஆளுநர் வித்யாசாகர் ராவை புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினர்.
இரண்டு அணியினரும் தம்மைச் சந்தித்த பிறகு எந்தவித அறிக்கையையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. இந்த நிலையில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.