ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கக் கோரி : செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் கூலித் தொழிலாளி ஒருவர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்கக் கோரி புதன்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் கூலித் தொழிலாளி ஒருவர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்கக் கோரி புதன்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யன்கோட்டையைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் எம்.சுந்தரமூர்த்தி (40). விவசாய கூலித் தொழிலாளியான இவர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பட்டிவீரன்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி நின்று, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக ஆக்குமாறு கோஷமிட்டார். மேலும், அங்கிருந்து குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இந்தத் தகவலறிந்து, பட்டிவீரன்பட்டி போலீஸார் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மலைச்சாமியிடம் பேசி கீழே இறங்க வைத்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com