கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 உலைகள் நிறுவப்பட்டு, மின் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பராமரிப்புப் பணி காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 7.41 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வணிக ரீதியில் விநியோகிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.