அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, சட்டப்பேரவை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அடுத்த கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியிலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியேறிய மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், சசிகலா தரப்பினர் தன்னை கடத்தி வைத்திருந்ததாகவும், மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர், கூவத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும் தன்னை கடத்தி வைத்திருந்தனர்' எனத் தெரிவிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.