பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் இன்று வழக்கறிஞர்கள் சந்தித்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை இறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை மாலை சரணடைந்தனர்.
இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று வழக்கறிஞர்கள் செந்தில், அசோகன் ஆகியோர் சந்தித்தனர்.