சென்னைக்கு புறப்பட்டனர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் கூவத்தூரில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.

கூவத்தூரில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.

அதிமுக கட்சியினரிடையே பிளவு ஏற்பட்ட பின்னர், அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், கூவாத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 8 -ஆம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் சட்டப்பேரவை குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்தியாசாகர்ராவ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் கூவத்தூரில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 9 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com