தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.வேங்கடசாமி, குற்றம் சாட்டப்பட்ட ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனுக்கு மட்டும் தினமும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் சேகர்ரெட்டி உள்ளிட்ட மற்ற 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com