அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவைக்கு வர  கொறடா உத்தரவு

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பேரவைக்கு வர அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவைக்கு வர  கொறடா உத்தரவு


சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பேரவைக்கு வர அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று பிறப்பித்த உத்தரவில், தமிழக சட்டப்பேரவையில் புதிய அரசின் மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் அதிமுகவைச் சேர்ந்த 134 எம்எல்ஏக்களும் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நாளை பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால், இன்று மாலை 3 மணிக்கு அதிமுக ஏம்எல்ஏக்களுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அரசக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com