அரசு இல்லத்தை காலி செய்யுங்கள்: பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி
அரசு இல்லத்தை காலி செய்யுங்கள்: பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தான் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த வீடு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரா பதவியேற்றுள்ளதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மூலம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி தரப்படுகிறது. ஓபிஎஸ் உடனடியாக காலி செய்யாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கிருந்து ஓபிஎஸ் காலி செய்யும் பட்சத்தில் எம்எல்ஏக்கள் விடுதியில் அறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருவதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com