சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுடன் பன்னீர்செல்வம் அணியினர் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் செம்மலை, மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் ஆகியோர் தனபாலை சந்தித்துப் பேசினர்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பன்னீர்செல்வம் அணியினர் தனபாலை சந்தித்துப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, பன்னீர்செல்வம் தரப்பில் என்னென்ன கோரிக்கை வைக்கப்பட்டது, இரு தரப்பினரும் எந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.