பிப். 20 முதல் 25 வரை தெருமுனைக் கூட்டங்கள்: மார்க்சிஸ்ட் முடிவு

பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.

பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.
சென்னையில் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:-
வறட்சி, விவசாயிகளின் தொடர் மரணங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, ஆணவக் கொலைகள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தை அச்சுறுத்தி வருகின்றந.
எனவே, தமிழக மக்களின் நலனைக் காக்கும் வகையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியும் பிப்ரவரி 20 முதல் 25-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பொது கூட்டங்கள், தெருமுனை கூட்டங்களை நடத்தி மாற்று அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பது,
சொத்துக் குவிப்பு வழக்கில் பட்டியலிடப்பட்டுள்ள சொத்துகள் குறிப்பிட்ட காலத்
துக்குள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com