சென்னை: தமிழக மக்களின் விருப்பப்படியே நாளை சட்டப்பேரவையில் வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று நட்ராஜ் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்த தகவலை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நட்ராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார். மக்களின் விருப்பப்படியே வாக்களிப்பேன் என்றும், இப்போதைக்கு அது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.