மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கைது

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர், சளிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் (64). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்.
இவர், கடந்த சில மாதங்களாக பந்தலூர், அம்பலமூலா பகுதியில் உள்ள முள்ளன்வயல் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவரது வீட்டில் தங்கியுள்ளார்.
அப்போது, அந்த வீட்டில் உள்ள 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தேவாலா காவல் துணைக் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான காவல்துறையினர் ராபர்ட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com