சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கை தொடர்பான மனு ஒன்றையும் பன்னீர்செல்வம் தரப்பினர், பேரவைத் தலைவர் தனபாலிடம் வழங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இந்த நிலையில், இன்று அவைத் தலைவர் தனபாலை சந்தித்த பன்னீர்செல்வம் தரப்பினர், நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.