வனப் பகுதியில் இளைஞர் சடலம் மீட்பு

புதுக்கோட்டை அருகே, நரிமேடு வனப் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த மதுரை மாவட்ட இளைஞரின் சடலத்தை, போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.

புதுக்கோட்டை அருகே, நரிமேடு வனப் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த மதுரை மாவட்ட இளைஞரின் சடலத்தை, போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.
புதுகை, நரிமேடு சமத்துவபுரம் அருகே அரசுக்குக் சொந்தமான தைலமரக் காடு உள்ளது. மேற்கு வனப் பகுதியைச் சேர்ந்த வனவர் செந்தில்மணி வியாழக்கிழமை காலை ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் ஓர் இளைஞர் இறந்து கிடப்பதை பார்த்து, திருக்கோகர்ணம் போலீஸாருக்கு தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி புதுகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அப்பகுதியில் கிடந்த செல்பேசியை எடுத்து அதிலிருந்த எண்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இறந்து கிடந்தவர் மதுரை மாவட்டம், பறவை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கனகராஜ் (26) என்பது தெரிய வந்தது.
கைவிரல் ரேகை, தடயவியல் துறையினர் தடயங்களை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வனப் பகுதியைக் கடந்து பாலன் நகர் வரை சென்று நின்று
விட்டதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com