காஞ்சிபுரம்: அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியை மூடுவதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சசிகலா ஆதரவு திமுக எம்எல்ஏக்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்புக்கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்காக நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களின் காரில் பலத்த பாதுக்காப்புடன் பேரவைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 11 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த தனியார் நடச்சத்திர விடுதி பராமரிப்பு பணி காரணமாக விடுதியை தற்காலிகமாக மூடுவதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.