இலக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு!

மதுரையில் தினமணி சார்பில் நடைபெற இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் "வள்ளுவர் முதற்றே அறிவு' என்கிற தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் அடுத்தபடியாகத் திருவள்ளுவர் பற்றிய உரைக்கு அனைத்துத் திருவள்ளுவர்

மதுரையில் தினமணி சார்பில் நடைபெற இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் "வள்ளுவர் முதற்றே அறிவு' என்கிற தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் அடுத்தபடியாகத் திருவள்ளுவர் பற்றிய உரைக்கு அனைத்துத் திருவள்ளுவர் கழகங்கள், குறள் அமைப்புகள், இலக்கிய அமைப்புகள் திரளாகக் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம். மதுரை தமிழிசைச் சங்கமும் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஞாயிறன்று மாலை 6 மணிக்கு மதுரை ராஜா முத்தையா அரங்கில் நடைபெற இருக்கிறது.
இலக்கிய அமைப்புகள் தங்கள் வருகை குறித்தும், யார் யார் வருகிறார்கள் என்பது குறித்தும் சனிக்கிழமைக்குள் விவரம் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கான இருக்கை உறுதி செய்யப்படும். அவரவர் பகுதி "தினமணி' நிருபர்கள் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
-ஆசிரியர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com