சென்னை: முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் எடுத்த முடிவின்படி முதல்வர் பழனிசாமி தனக்கு ஆதரவுக்கோரி கொண்டுவரும் தீர்மாணத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.