சென்னையில் காசிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங்காங்கே மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. சென்னையை பொறுத்தவரை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.