தமிழகத்தின் மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பையும், உறுதுணையையும் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்றதையடுத்து, பழனிசாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த தங்களுக்கு நன்றி. தமிழகம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க, ஒத்துழைப்பையும், உறுதுணையையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.