தலைமைச்செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைவாக்கெடுப்பு ன்று காலை 11 மணிக்கு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைவாக்கெடுப்பு ன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து தலைமைச்செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேரவைக்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது.

பாதுகாப்பு பணி குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com