சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது வரையிலான நிகழ்வுகளில் தன்னுடைய பங்கு குறித்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகமாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களும், பரபரப்பான சூழ்நிலைகளும் ஏற்பட்டன.
அதன் உச்சமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வெகுவாக வதந்தி பரவியது. அதனால் உடனே மும்பையில் இருந்து சென்னைகு விரைந்து வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்ற ஜெயலலிதாவை பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் தமிழகத்தில் எதிர்பாராத விதமா சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக பொறுப்பேற்றுக் கொ ண்டார்.
இந்த பரப்பான தொடர் நிகழ்வுகள் குறித்து தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர் சி.எச். வித்யாசாகர் ராவ் ஒரு புத்தகம் எழுத உள்ளார். அந்த புத்தகத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவரது மரணத்துக்குபின் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிகழ்வுகள் வரை குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டது குறித்தும் அதில் தனது பங்கு குறித்தும் பல உண்மை நிலவரங்களை அவர் விளக்கியுள்ளதாக கூறப்பகிறது. .
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பல தரப்பிலும் இருந்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கவர்னர் என்ற முறையில் தான் ஆற்றிய பங்கு குறித்து பல விளக்கங்களை அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.