முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த 10 எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேரின் இடங்கள் மாற்றப்படவில்லை.
ஆனால், முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இருக்கைகள் மட்டும் மாற்றப்பட்டன. முன்னாள் முதல்வர் என்கிற முறையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சரவையில் கடைசி இடம் வகிப்பவரான பாலகிருஷ்ண ரெட்டிக்கு அடுத்து இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று, பாண்டியராஜனுக்கு பேரவையின் மூன்றாவது பிரிவில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு அளித்த மற்ற உறுப்பினர்களின் வரிசை இடங்கள் ஏதும் மாற்றப்படவில்லை.
அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
ஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.