காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திய பொறியியல் பட்டதாரி தற்கொலை

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை, சனிக்கிழமை கத்தியால் குத்திய பொறியியல் பட்டதாரி இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை, சனிக்கிழமை கத்தியால் குத்திய பொறியியல் பட்டதாரி இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி வட்டம், அலுந்தலைப்பூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான, சின்னசாமி மகன் மணிகண்டன் (25) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலை, அந்த மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பயணிகள் நிழற்கூடத்தில் மணிகண்டன் அந்த மாணவியை காதலிப்பதாக எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை மணிகண்டனை கண்டித்தாராம்.
இந்நிலையில், அந்த மாணவி சனிக்கிழமை காலை அலுந்தலைப்பூரில் உள்ள கழிப்பிடத்துக்கு நடந்து சென்றபோது, அங்கு வந்த மணிகண்டன் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன் சரமாரியாகக் குத்திவிட்டு ஓடி விட்டார். இதில், கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த மாணவி மயங்கி விழுந்தார். பிறகு, அந்த மாணவி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தில், மணிகண்டன் அதே பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிறுகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com