கூவத்தூர் நட்சத்திர விடுதியை காலி செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள்

மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள "கோல்டன் பே' என்ற தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள "கோல்டன் பே' என்ற தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏ-க்கள் கடந்த 11 நாள்களாக கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக 122 எம்.எல்.ஏ-க்களும் சனிக்கிழமை விடுதியில் இருந்து புறப்பட்டனர். காலை 8 மணிக்கு அமைச்சர்களின் 31 கார்கள் மூலம் அவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால், கூவத்தூரில் கடந்த 11 நாள்களாக அதிமுக நிர்வாகிகளாலும், காவல் துறையினராளும் நிரம்பியிருந்த விடுதி வெறிச்சோடி கிடந்தது. இதைத் தொடர்ந்து, 3 நாள்களுக்கு விடுதி பராமரிப்புப் பணிகளுக்காக மூட திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com