பேரவை கூடும் நாள் குறிப்பிடப்படாமல், சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.
இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை கூடும் நாள் குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார் பேரவைத் தலைவர் தனபால்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப். 18) நடைபெற்றது.
கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.