பேரவை பரபரப்புகள்...

தமிழக சட்டப்பேரவை சனிக்கிழமை (பிப்.18) காலை 11 மணிக்கு கூடியது. முன்னதாக அதிமுக, திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர்.
பேரவை பரபரப்புகள்...

தமிழக சட்டப்பேரவை சனிக்கிழமை (பிப்.18) காலை 11 மணிக்கு கூடியது. முன்னதாக அதிமுக, திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர்.
காலை 10.44: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வந்தனர்.
காலை 10.50: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் வந்தனர்.
காலை 10.52: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேரவைக்கு வந்தார்.
காலை 11: அவைத் தலைவர் பி.தனபால், பேரவைக்கு வந்து திருக்குறளைப் படித்து அவை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார்.
காலை 11.07: செம்மலை உரிமைப் பிரச்னை கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து, ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
நண்பகல் 12.01: பேரவைத் தலைவர் தனபாலுடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
நண்பகல் 12:11: அமளிகளைத் தொடர்ந்து, சட்டப்பேரவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 1: சட்டப்பேரவை மீண்டும் கூடியது.
மதியம் 1.13: கடும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற அவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டு அவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தார்.
பிற்பகல் 3: சட்டப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு, பேரவை மீண்டும் கூடியது.
பிற்பகல் 3.05: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பிற்பகல் 3.21: வாக்கெடுப்பு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 122 வாக்குகளுடன் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com