கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், கடும் வறட்சி நிலவுவதால் உணவு, குடிநீர் தேடி சாலையில் வன விலங்குகள் சுற்றித் திரிகின்றன.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. காடுகள் உலர்ந்து காணப்படுவதால் வெப்பமும் அதிகரித்துள்ளது. நீர்
நிலைகள் முற்றிலும் வறண்டு விட்டன. மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்து விட்டதால், குரங்குகள், பறவைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில்லை.
இதனால், மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி கூடலூர் - பெங்களூரு சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.