மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல் துறையிடம் புகார் அளிப்பேன்

செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று கோவை தெற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தெரிவித்துள்ளார்.

செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று கோவை தெற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நிலவி வந்த குழப்ப நிலை காரணமாக, அம்மன் அர்ச்சுணன் கடந்த 10 தினங்களாக சென்னையில் தங்கி இருந்தார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு அம்மன் அர்ச்சுணனை, மர்ம நபர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கோவை திரும்பிய அம்மன் அர்ச்சுணன் இது குறித்து கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் வகையில் நாங்கள் செயல்பட்டோம்.
இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த என்னுடைய செல்லிடப்பேசிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, என்னையும், எனது குடும்பத்தாரையும் அவதூறாகப் பேசினார். அரசியல் பின்னணி கொண்ட நபர்தான் என்னை மிரட்டும் நோக்கில் பேசியுள்ளார். மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஓரிரு தினங்களில் காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com